
பணம் வந்தாலும் பழைமை மாறாமல் இருப்பது என்பது மிகப் பெரும் பண்பு. வள்ளுவனை விட இதை சிறப்பாக யார் சொல்லிவிட முடியும்
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். குறள் 333
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும். மு.வ.
அமெரிக்கவின் ஒரு சிற்றூரில், நிறைவான வாழ்கை நடத்தி வரும், சாதாரண இளைஞன், பெரும் செல்வந்தரான மாமா இறந்த பின் 40 பில்லியன் டாலர்களுக்கு சொந்தகாரணாகிறான். செய்தி சேகரிக்க, பொய் நட்பு கொள்ளும் பொண்ணிடம் உண்டாகும் காதல், சொத்தை ஏமாற்றிப் பறிக்க முயலும் ஒரு கூட்டம் என நிறைய தமிழ் பட களங்களும், பாத்திரங்களும் இருந்தாலும் ஆடம் சாண்டல்ரின்[Adam Sandler] மற்றுமொரு முத்திரைப் படம்.
மனதை தொடும் காட்சிகளுடன் நகைசுவை இணையும் போது, கதையும் தருக்கமும் படத்திற்கு தேவையே இல்லை என்று நிறுவும் மற்றுமொரு படம்.
0 Comments :
Post a Comment