மூடநம்பிக்கைகளும் வழிபாட்டுணர்வை எதிர்பார்க்கும் பிம்பங்களும் போலிப்பெருமிதங்களும் நிறைந்த தமிழ்த்திரைப்பரப்பில் தனித்ததொரு தீவாய் மிதந்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. ஒளிவட்டங்களின் சூட்டில் பொசுங்கிய பெருவெளியில் கோபம் கொண்ட ஒரு காட்டுவிலங்கைப்போல ராதா என்னும் கலைஞன் அலைபாய்ந்ததைப் புரிந்துகொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமானதல்ல. அதற்குமுன் பீடத்தில் ஏற்றப்பட்ட விக்கிரகங்கள் அனைத்தையும் இடதுகாலால் உதைத்தெறிந்த ராதா, மதிப்பீடுகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப்பார்த்துப் பகடிசெய்தார். போர்க்குணங்களும் அரசியலுணர்வும் மரத்துப்போன காலகட்டத்தில் வாழும் நாம் அந்த கலகக்கலைஞனின் நூற்றாண்டில் அவரை நினைவுகொள்வது நமது வரலாற்றுப் பிரக்ஞையை மீட்டெடுக்கவோ அல்லது குறைந்தபட்சம் ஞாபகப்படுத்திக்கொள்ளவோ உதவும்.
நன்றி மிதக்கும்வெளி
நன்றி மிதக்கும்வெளி
Powered by ScribeFire.
0 Comments :
Post a Comment